பரபரக்கும் அரசியல் சூழல் : திக் திக் நிமிடங்கள்; அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்!

பரபரக்கும் அரசியல் சூழல் : திக் திக் நிமிடங்கள்; அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்!

நக்கீரன்

நக்கீரன்

48m

Loading...

மிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியாக 108 இடங்களில் வென்றாலும் விஜய்யின் தவெக ஆட்சி அமைப்பதற்கான சிக்கல் இன்னும் நீடித்துக் கொண்டே இருந்தது.

ஆட்சி அமைப்பதற்குப் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முயன்று வந்தார். அதன்படி திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை விஜய் நாடி இருந்தார்.

முதலில் காங்கிரஸ் மட்டும் தவெகவிற்கு ஆதரவு கொடுத்திருந்த நிலையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன. இதனையடுத்து சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய இரு கட்சிகளும் தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. அதனைத் தொடர்ந்து முஸ்லீம் லீக் கட்சியும், த.வெ.க. விற்கு ஆதரவு தெரிவித்துள்ளது எனத் தகவல் வெளியானது.

எனவே 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழகச் சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை என்ற எண்ணிக்கையை எட்ட, காங்கிரஸ் (5 இடங்கள்), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML - 2 இடங்கள்) ஆகிய கட்சிகள் தவெக.விற்குத் தங்கள் ஆதரவை வழங்கின. இதன் மூலம் தவெக தலைமையிலான கூட்டணி மொத்தம் 118 இடங்களுடன் பெரும்பான்மையைப் பெற்றது. இதனையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநர் அர்லேக்கரை மூன்றாவது முறையாகச் சந்தித்துப் பேசினார்.

அப்போது விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு நாளை பதவியேற்பு விழா நடத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் இரு விசிக எம்எல்ஏக்களும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ளனர் என செய்திகள் வெளியாகின. மற்றொருபுறம் தவெக ஆட்சியமைக்கத் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதே சமய்ம் மேலும், திடீர் திருப்பமாகஆட்சியில் பங்கு வேண்டும் என்றும், துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என விசிக கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என விசிக உயர் நிலைக் கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்த முடிவை திருமாவளவன் நாளை அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Nakkheeran

Comments

2
Loading comments...